search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைகள் திறப்பு
    X
    கடைகள் திறப்பு

    தமிழகத்தில் கடைகள் இரவு 10 மணி வரை செயல்படலாம்

    தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு 23-ந் தேதி காலை (திங்கட்கிழமை) 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது நடைமுறையில் உள்ள கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 06.09.2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் 23.08.2021 முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

    தடுப்பூசி போடும் பணி

    கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

    அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23 ஆம் தேதியிலிருந்து இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

    ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும்.
    Next Story
    ×