search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் தடுப்பூசி தட்டுப்பாட்டாலும் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இந்நிலையில், சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

    கோப்புப்படம்

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 044- 2538 4520, 4612 2300 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×