என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏலகிரி மலையில் வீட்டிற்குள் நுழைந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
Byமாலை மலர்21 Aug 2021 10:14 AM GMT (Updated: 21 Aug 2021 10:14 AM GMT)
வனத்துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி சமையல் அறையில் இருந்த 15 அடி நீள மலைப்பாம்பை மீட்டனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள கோட்டூர் - பள்ளக்கனியூர் கிராமங்களுக்கு இடையே சென்னை பகுதியை சேர்ந்த ஒருவரின் பங்களா உள்ளது. இதனை மனோஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். மேலும் கூண்டு அமைத்து 20-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சென்றபோது சமையலறை சுவர் மீது 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஏறி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி சமையல் அறையில் இருந்த 15 அடி நீள மலைப்பாம்பை மீட்டனர். பின்னர் லாவகமாக மூட்டைகட்டி ஏலகிரிமலை 3-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். கோழியை விழுங்க மலைப்பாம்பு வந்திருக்கலாம் என்றும் கோழியின் கூண்டுக்குள் செல்ல முடியாததால் பங்களாவுக்குள் வந்திருக்கக்கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள கோட்டூர் - பள்ளக்கனியூர் கிராமங்களுக்கு இடையே சென்னை பகுதியை சேர்ந்த ஒருவரின் பங்களா உள்ளது. இதனை மனோஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். மேலும் கூண்டு அமைத்து 20-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சென்றபோது சமையலறை சுவர் மீது 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஏறி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி சமையல் அறையில் இருந்த 15 அடி நீள மலைப்பாம்பை மீட்டனர். பின்னர் லாவகமாக மூட்டைகட்டி ஏலகிரிமலை 3-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். கோழியை விழுங்க மலைப்பாம்பு வந்திருக்கலாம் என்றும் கோழியின் கூண்டுக்குள் செல்ல முடியாததால் பங்களாவுக்குள் வந்திருக்கக்கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X