search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசங்கர் பாபா
    X
    சிவசங்கர் பாபா

    சிவசங்கர் பாபா வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி இடமாற்றம்

    சிவசங்கர் பாபா மீது 2 வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
    சென்னை:

    சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 2 வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை

    இந்நிலையில்  சிவசங்கர் பாபா  வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை மாநகராட்சி விஜிலென்ஸ் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக குணவர்மன் நியமனம்.

    Next Story
    ×