search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி
    X
    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

    அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம்- அமைச்சர் செந்தில்பாலாஜி

    கடந்த காலம்போல் இல்லாமல், வெளிப்படையான நிர்வாகத்தை தருவதே தமிழக அரசின் நோக்கம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
    சென்னை:

    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியை காணவில்லை. பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பு உள்ளதற்கும் வித்தியாசம் மட்டும் 2.38 லட்சம் டன்.

    நிலக்கரி

    * நிலக்கரி காணாமல்போன விவகாரத்தில் தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * அனல்மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தப்படும்.

    * இந்தாண்டு மின்கட்டணத்தில் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படவில்லை.

    * குறைபாடுகள் உள்ள 8,900 மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * கடந்த காலம்போல் இல்லாமல், வெளிப்படையான நிர்வாகத்தை தருவதே தமிழக அரசின் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×