என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்னடைவு
அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா 3-ம் அலையில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரியலூர்:
பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் மிகவும் பின்தங்கி உள்ளது. இதன்படி கரூரில் 5,798, தஞ்சாவூரில் 5,448, புதுக்கோட்டையில் 3,268, திருவாரூரில் 2,873, பெரம்பலூரில் 2,798, அரியலூரில் 2,416, மயிலாடுதுறையில் 2,009, நாகையில் 1,756, திருச்சியில் 1,721 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால் மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இனி வரும் காலங்களில் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம், சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.
மேலும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா 3-ம் அலையில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள முடியும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் மிகவும் பின்தங்கி உள்ளது. இதன்படி கரூரில் 5,798, தஞ்சாவூரில் 5,448, புதுக்கோட்டையில் 3,268, திருவாரூரில் 2,873, பெரம்பலூரில் 2,798, அரியலூரில் 2,416, மயிலாடுதுறையில் 2,009, நாகையில் 1,756, திருச்சியில் 1,721 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால் மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இனி வரும் காலங்களில் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம், சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.
மேலும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா 3-ம் அலையில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள முடியும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story