என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிணற்றில் இறங்கி வெளியே வர முடியாமல் தவித்த விவசாயி-தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
Byமாலை மலர்18 Aug 2021 10:30 AM GMT (Updated: 18 Aug 2021 10:30 AM GMT)
விளை நிலங்களிலேயே கிணறு அமைத்து விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. பெரும்பாலானோர் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்கின்றனர். இதற்கு கிணற்று நீர் பாசனம் முக்கிய நீராதாரமாக உள்ளது. தங்களது விளை நிலங்களிலேயே கிணறு அமைத்து பாசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மடத்துக்குளம் அருகே உள்ள சின்னப்பன் புதூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டார் அமைத்துள்ளார். ஆனால் மின்மோட்டார் பழுதால் தண்ணீர் வரவில்லை.
இதையடுத்து மின்மோட்டாரை சரி செய்ய 100 அடி ஆழமுள்ள கிணற்றில் சுப்பிரமணியன் இறங்கினார். பின்னர் கிணற்றில் இருந்து சுப்பிரமணியனால் வெளியே வர முடியவில்லை.
உடனே உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுப்பிரமணியனை பத்திரமாக மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X