என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர், வாணியம்பாடியில் 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 3 பேர் கைது
Byமாலை மலர்18 Aug 2021 10:08 AM GMT (Updated: 18 Aug 2021 10:08 AM GMT)
ஆலங்காயத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த மேல்நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த டிரைவர் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு, பேராம்பட்டு, ஜலகாம்பாறை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் உணவு வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் 5 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து பசலிகுட்டை பகுதியைச் சேர்ந்த டிரைவர் நாராயணன், கிளீனர் கிரிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 டன் ரேஷன் அரிசி, மினிலாரியை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உணவு வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் வாணியம்பாடியை அடுத்த நேதாஜி நகர் பகுதியில், ஆலங்காயத்தில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினிவேன் ஒன்று போலீசார் இருப்பதை பார்த்ததும் வேகமாக சென்றது. உடனடியாக போலீசார் மினிவேனை துரத்தி சென்றனர். சிறிதுதூரம் சென்ற மினிவேனின் சக்கரம் கழன்றி பழுதாகி சாலையின் நடுவே நின்றது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று மினிவேனை சோதனை செய்தபோது அதில் 2½ டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து ஆலங்காயத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த மேல்நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த டிரைவர் குமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மற்றும் மினிவேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு, பேராம்பட்டு, ஜலகாம்பாறை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் உணவு வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் 5 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து பசலிகுட்டை பகுதியைச் சேர்ந்த டிரைவர் நாராயணன், கிளீனர் கிரிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 டன் ரேஷன் அரிசி, மினிலாரியை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உணவு வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் வாணியம்பாடியை அடுத்த நேதாஜி நகர் பகுதியில், ஆலங்காயத்தில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினிவேன் ஒன்று போலீசார் இருப்பதை பார்த்ததும் வேகமாக சென்றது. உடனடியாக போலீசார் மினிவேனை துரத்தி சென்றனர். சிறிதுதூரம் சென்ற மினிவேனின் சக்கரம் கழன்றி பழுதாகி சாலையின் நடுவே நின்றது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று மினிவேனை சோதனை செய்தபோது அதில் 2½ டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து ஆலங்காயத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த மேல்நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த டிரைவர் குமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மற்றும் மினிவேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X