என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கில் உரக்கடைகளுக்கு தளர்வு - விவசாயிகள் வலியுறுத்தல்
Byமாலை மலர்18 Aug 2021 6:04 AM GMT (Updated: 18 Aug 2021 6:04 AM GMT)
கிராமப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாயம் மற்றும் பால் உற்பத்தி சார்ந்த பணிகளை முடிக்க மாலை நேரமாகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உரக்கடைகளை இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கிராமப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாயம் மற்றும் பால் உற்பத்தி சார்ந்த பணிகளை முடிக்க மாலை நேரமாகிறது. அதன் பின்பே கால்நடைகளுக்கு தீவனம் வாங்கவும், விவசாயப் பணிக்கு உரம், மருந்து வாங்கவும் கடைக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. கடந்தாண்டு ஊரடங்கின் போதும் உரம் மற்றும் தீவன விற்பனை கடைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது.
விவசாயிகள் நலன் கருதி உரக்கடைகள் இரவு 8 மணி வரையாவது இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X