search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையம்
    X
    தேர்தல் ஆணையம்

    தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. தேர்தல் தேதி அறிவிப்பு

    அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து அந்த இடத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் நிலையில்,  ஒரு இடத்துக்கான மாநிலங்களவை தேர்தல் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து அந்த இடத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.    

    வேட்பு மனு துவக்கம்- ஆகஸ்ட் 24   
    வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் -ஆகஸ்ட் 31    
    வேட்பு மனு பரிசீலனை - செப்டம்பர் 1    
    திரும்பப் பெற கடைசி நாள்- செப்டம்பர் 3    
    தேர்தல் நடைபெறும் நாள்- செப்டம்பர் 13 (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)
    Next Story
    ×