search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருமணமானதை மறைத்து உல்லாசம் - இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி

    மதுரை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மேல வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் வீரகுமார் (வயது 30). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.

    மதுரை சிலைமானுக்கு வீரகுமார் வேலை நிமித்தமாக அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது பஸ்சில் இளம்பெண் ஒருவரை பார்த்தார். அவர் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார்.

    2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    வீரகுமார் அந்த பெண்ணிடம், எனக்கு திருமணம் ஆகவில்லை. வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று கூறினார். இதை அந்த பெண்ணும் நம்பினார்.

    இதையடுத்து சிலைமானில் உள்ள இளம்பெண் வீட்டுக்கு வீரகுமார் அடிக்கடி சென்று வந்தார். அப்படி அவர்கள் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் 3 மாதம் கர்ப்பமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீரகுமாரிடம், நான் இப்போது கர்ப்பமாக உள்ளேன். நீங்கள் என்னை உடனடியாக திருமணம் செய்யுங்கள் என்று வற்புறுத்தினார்.

    அப்போது வீரகுமார், எனக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. நான் உன்னை திருமணம் செய்ய முடியாது. நீ பல்வேறு ஆண்களுடன் பழகி வந்ததாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே உன் கர்ப்பத்துக்கு நான் காரணமல்ல என்று மறுத்தார்.

    இதுதொடர்பாக அந்த பெண் சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி வழக்குப்பதிவு செய்து 2 பேரிடமும் விசாரணை நடத்தினார்.

    பின்னர் போலீசார் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீரகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×