என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பொள்ளாச்சி அருகே 3 வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே உள்ளது தம்மம்பதி கிராமம்.
இந்த கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சரோஜினி என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் நிவண்யாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது.
நேற்றுமுன்தினம் சரோஜினி தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார். அப்போது குழந்தை நிவண்யாஸ்ரீ திடீரென மயங்கி விழுந்து விட்டதாகவும், ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும் எனவும் சரோஜினி தனது உறவினர்களிடம் தெரிவித்தார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து டாக்டர்கள் சம்பவம் குறித்து ஆனைமலை போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மர்மச் சாவு என வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சரோஜினி முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து அவரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக போலீசார் கவனித்து வந்தனர்.
இதற்கிடையே குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதற்கான காயங்கள் இருந்துள்ளது. இதையடுத்து போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசாரின் விசாரணையில், சரோஜினியே பெற்ற மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த திடுக்கிடும் தகவல்தெரியவந்தது.
சரோஜினிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். சரோஜினி தனது கணவர் வேலைக்கு சென்றதும், அந்த வாலிபருக்கு போன் செய்து தனது வீட்டிற்கு வரவழைத்து அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். ஆனால் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் இதுவரை மணிகண்டனுக்கு தெரியாமலே இருந்தது. அந்தளவுக்கு யாருக்கும் தெரியாமலும், சந்தேகம் வராத வகையில் 2 பேரும் நடந்து கொண்டுள்ளனர்.
கணவர் வேலைக்கு சென்று விட்டாலும் வீட்டில் குழந்தை இருந்தது சரோஜினியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்துள்ளது. இதனால் என்ன செய்யலாம் என யோசித்தார். அப்போது நாம் கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்றால் அது குழந்தை இருக்கும் வரை முடியாது. எனவே குழந்தை கொலை செய்ய முடிவு செய்தார்.
சம்பவத்தன்று குழந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தது. கள்ளக்காதல் மோகத்தில் இருந்த சரோஜினி தனது மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையின் முகத்தை தலையணையால் அமுக்கினார். குழந்தை சத்தம் விட முடியாமலும், மூச்சுவிட முடியாமலும் திணறியது. சிறிது நேரத்தில் குழந்தை மயக்கம் அடைந்தது. இருப்பினும் ஆத்திரம் அடங்காத அவர் குழந்தையின் கழுத்தை நெரித்தார். இதில் குழந்தை சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டது.இதையடுத்து தனது உறவினர்கள் குழந்தை திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டதாக நாடக மாடியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மர்மச்சாவு என்று பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும் கொலை தொடர்பாக சரோஜினியையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது கள்ளக்காதலனையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்