என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோலார்பேட்டை அருகே காரில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்16 Aug 2021 9:40 AM GMT (Updated: 16 Aug 2021 9:40 AM GMT)
ஜோலார்பேட்டை அருகே காரில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஜோலார்பேட்டை அருகே தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் காரை ஓட்டி வந்த நபரை பிடித்து ஆம்பூர் டவுன் போலீசில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்த ஜெகன் குமார் (வயது 25) என்பது தெரியவந்தது. மேலும் இவர் 3 மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் பைபாஸ் சாலையில் ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமான 2 கார்களுக்கு டிரைவராக பணிபுரிந்து வந்தபோது ஒரே நாளில் 2 கார்களை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகன் குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 கார்கள் மற்றும் 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X