search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மது-லாட்டரி பதுக்கி வைத்து விற்ற 4 பேர் கைது

    பல்லடம் அருகே காளிவேலம்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    பல்லடம்:

    பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் அரசு மதுபானக் கடைகளின் அருகே சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு விற்பதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், செந்தில் பிரபு தலைமையிலான போலீசார் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டம்பாளையம் அரசு மதுபானக்கடை அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த ரஞ்சித் (வயது 33), திண்டுக்கல்லை  சேர்ந்த முருகன் (45), மதுரையைச்சேர்ந்த நாகராஜ் (38)ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 60 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பல்லடம் அருகே காளிவேலம்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். 

    அப்போது காளிவேலம்பட்டி பகுதியில் வெள்ளியங்கிரி (58) என்பவர் நடத்தி வரும் டீ கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளியங்கிரியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 156 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×