search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நொச்சிப்பாளையம் பகுதியில் கிளை வாய்க்காலில் கழிவுநீர் செல்வதை படத்தில் காணலாம்.
    X
    நொச்சிப்பாளையம் பகுதியில் கிளை வாய்க்காலில் கழிவுநீர் செல்வதை படத்தில் காணலாம்.

    சொந்த பணத்தில் தூர்வாரியும் கிளை வாய்க்காலில் கழிவுநீர் வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி

    கடந்த சில ஆண்டுகளாக கிளை வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் வந்து சேராத நிலை இருந்து வருகிறது.
    பல்லடம்:

    பல்லடம் அருகே பி.ஏ.பி.பாசன மெயின் வாய்க்காலில் இருந்து அல்லாளபுரம், காளி நாதம்பாளையம், அவரப்பாளையம் வழியாக நொச்சிபாளையம் கிராமங்களில் உள்ள கடைமடை விவசாய நிலங்களுக்கு பாசனம் கிடைக்கும் வகையில் கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
     
    இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக கிளை வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு  தண்ணீர் வந்து சேராத நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை பி.ஏ.பி.பாசனத் திட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லாததால் விவசாயிகள் நிலத்தடி நீர், லாரி தண்ணீர் போன்றவற்றை வாங்கி விவசாயம் பார்த்து வந்தனர். 

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பி.ஏ.பி.பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகாரிகளை நம்பி பயனில்லை என முடிவெடுத்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களது சொந்தப்பணத்தில் கிளை வாய்க்கால்களை தூர்வாரி சுத்தம் செய்தனர்.
     
    பாசனத் தண்ணீரை எதிர்பார்த்திருந்த நிலையில் ஆங்காங்கே வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 

    எனவே அதிகாரிகள் தாமதிக்காமல் உடனடி நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் கழிவுநீர் செல்வதை தடுத்து பி.ஏ.பி.பாசன தண்ணீரை கிளை வாய்க்கால்களில் வருவதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழி இல்லை என நொச்சிபாளையம் விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×