என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொந்த பணத்தில் தூர்வாரியும் கிளை வாய்க்காலில் கழிவுநீர் வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி
Byமாலை மலர்15 Aug 2021 8:38 AM GMT (Updated: 15 Aug 2021 8:38 AM GMT)
கடந்த சில ஆண்டுகளாக கிளை வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் வந்து சேராத நிலை இருந்து வருகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே பி.ஏ.பி.பாசன மெயின் வாய்க்காலில் இருந்து அல்லாளபுரம், காளி நாதம்பாளையம், அவரப்பாளையம் வழியாக நொச்சிபாளையம் கிராமங்களில் உள்ள கடைமடை விவசாய நிலங்களுக்கு பாசனம் கிடைக்கும் வகையில் கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக கிளை வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் வந்து சேராத நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை பி.ஏ.பி.பாசனத் திட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லாததால் விவசாயிகள் நிலத்தடி நீர், லாரி தண்ணீர் போன்றவற்றை வாங்கி விவசாயம் பார்த்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பி.ஏ.பி.பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகாரிகளை நம்பி பயனில்லை என முடிவெடுத்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களது சொந்தப்பணத்தில் கிளை வாய்க்கால்களை தூர்வாரி சுத்தம் செய்தனர்.
பாசனத் தண்ணீரை எதிர்பார்த்திருந்த நிலையில் ஆங்காங்கே வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
எனவே அதிகாரிகள் தாமதிக்காமல் உடனடி நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் கழிவுநீர் செல்வதை தடுத்து பி.ஏ.பி.பாசன தண்ணீரை கிளை வாய்க்கால்களில் வருவதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழி இல்லை என நொச்சிபாளையம் விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X