என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாநகர் பகுதியில் குழாய்கள் உடைப்பால் வீணாகும் குடிநீர்
Byமாலை மலர்15 Aug 2021 7:56 AM GMT (Updated: 15 Aug 2021 7:56 AM GMT)
அவிநாசி ரோடு, பெரியார் காலனி, அனுப்பர்பாளையம் கருப்பராயன் கோவில் ஆகிய இடங்களிலும், தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் அருகிலும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வந்து சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பிரதான குடிநீர் குழாய் அவிநாசி ரோடு வழியாக சாலையோரம் பதிக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகும் நிலை தொடர்கிறது.
அவிநாசி ரோடு, பெரியார் காலனி, அனுப்பர்பாளையம் கருப்பராயன் கோவில் ஆகிய இடங்களிலும், தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் அருகிலும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
இதுபோல் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் வீணாவதோடு சாலையும் சேதமடைகிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே குழாய்களில் உடைப்பு ஏற்படாத வகையிலும், உடைப்பு ஏற்பட்டால் உடனே சரி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X