search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாநகர் பகுதியில் குழாய்கள் உடைப்பால் வீணாகும் குடிநீர்

    அவிநாசி ரோடு, பெரியார் காலனி, அனுப்பர்பாளையம் கருப்பராயன் கோவில் ஆகிய இடங்களிலும், தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் அருகிலும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வந்து சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பிரதான குடிநீர் குழாய் அவிநாசி ரோடு வழியாக  சாலையோரம் பதிக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகும் நிலை தொடர்கிறது.

    அவிநாசி ரோடு, பெரியார் காலனி, அனுப்பர்பாளையம் கருப்பராயன் கோவில் ஆகிய இடங்களிலும், தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் அருகிலும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

    இதுபோல் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் வீணாவதோடு சாலையும் சேதமடைகிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    எனவே குழாய்களில் உடைப்பு ஏற்படாத வகையிலும், உடைப்பு ஏற்பட்டால் உடனே சரி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×