search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.பி. வேலுமணி
    X
    எஸ்.பி. வேலுமணி

    திமுகவுக்கு என் மீது கோபம்- எஸ்.பி.வேலுமணி

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் மீது பொய் வழக்கு போட்டு சோதனை நடத்தினார்கள்.
    சென்னை:

    அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் சொந்தமான இடங்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  வேலுமணியின் வங்கிக்கணக்கும் முடக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வேலுமணி வந்தார். விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.

    பின்னர் நிருபர்களிடம் வேலுமணி கூறுகையில்,

    ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி தொடர நான் முக்கிய காரணம் என்பதால் 
    திமுக
    வுக்கு என் மீது கோபம்.  அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் மீது பொய் வழக்கு போட்டு சோதனை நடத்தினார்கள்.

    என்னைப் பொறுத்தவரை நான் அனைத்து மதத்தையும் மதிப்பவன். கடவுளை நம்புகிறேன். 30 வருடங்களாக நான் சபரிமலைக்கு சென்று வருகிறேன். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.13 லட்சம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது அதில் உண்மையில்லை. வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம். மக்கள் என் பக்கம் உள்ளார்கள்.  

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×