search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர் - போலீசில் பரபரப்பு புகார்

    கோவையில் திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் சுக்கிரவார்பேட்டையில் உள்ள தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு எனக்கு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த சிவக்குமார் (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் எங்களது காதலை வளர்த்து வந்தோம்.

    இந்தநிலையில் எனது காதலர் ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து சென்றார். அப்போது நாங்கள் அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினோம். அங்கு வைத்து சிவக்குமார் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் உல்லாசமாக இருந்தார். இவ்வாறு அவர் பலமுறை என்னை வெளி இடங்களுக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக அனுபவித்தார்.

    தற்போது நான் அவரை சந்தித்து திருமணம் செய்யுமாறு கேட்டபோது மறுத்து விட்டார். மேலும் கொலை மிரட்டல் விடுத்தூர்.

    எனவே என்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து விட்ட ஏமாற்றிய சிவக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சிவக்குமார் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×