search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

    சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சமயபுரம்:

    சமயபுரம் அருகே உள்ள இனாம் சமயபுரம் சவுமியா நகரை சேர்ந்தவர் அம்ரித் டெனிஸ் சார்லினா (வயது 37). இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவருடைய மாமனார், மாமியார் வேலைக்கு சென்றுவிட, டீச்சர் காலனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அம்ரித் டெனிஸ் சார்லினா சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, மாடியில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருடு போயிருந்தது. கீழ் தளத்தில் இருந்த 70 பவுன் நகைகள் திருடுபோக வில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×