என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
Byமாலை மலர்13 Aug 2021 2:17 PM GMT (Updated: 13 Aug 2021 2:17 PM GMT)
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே சாலைப்புதூர் நல்லூரைச் சேர்ந்தவர் சுயம்பு. இவருடைய மகன் முத்துலிங்கம் (வயது 32). கூலி தொழிலாளியான இவர் தனது நண்பரான புத்தன்தருவையைச் சேர்ந்த தங்கராஜிடன் தட்டார்மடம் அருகே நயினார்புரத்தில் நடந்த கோவில் கொடை விழாவில் கிடா வெட்ட சென்றிருந்தார்.
அப்போது முத்துலிங்கம் தனது மோட்டார் சைக்கிளை அதே பகுதியில் உள்ள உதயசிங் என்பவரது வீட்டில் நிறுத்தி சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் ரூ.50 ஆயிரம் வைத்திருந்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நவீன்குமார், முத்துலிங்கத்தின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான நவீன்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X