search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    போக்குவரத்து விதிகளை மீறிய 708 பேர் மீது வழக்கு

    போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் காவல் உட்கோட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் அந்தந்த பகுதி போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு சிவப்பு விளக்கு ஒளிரும் போது கடந்து சென்றதாக 6 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 38 பேர் மீதும், அதிக பாரம் ஏற்றி சென்றதாக 6 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 420 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 11 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 116 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாத 36 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 81 பேர் மீதும் என மொத்தம் 708 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.91 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர, அரசின் உத்தரவை மதிக்காமல் முக கவசம் அணியாமல் சாலைகளில் சென்றதாக 28 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    Next Story
    ×