search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

    கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
    வளவனூர்:

    வளவனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக ராஜா என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த வளவனூர் பக்கமேடு பாதை பகுதியை சேர்ந்த வேலு(வயது 45), ராஜாவிடம் தனது நிலத்தையொட்டியுள்ள புறம்போக்கு நிலத்துக்கு பட்டா தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேலு, ராஜாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததோடு, அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தெரிகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுவை கைது செய்தனர்.
    Next Story
    ×