என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரம் அருகே பரிதாபம்-வேனின் பின்னால் பைக் மோதி டெய்லர் பலி
Byமாலை மலர்10 Aug 2021 9:06 AM GMT (Updated: 10 Aug 2021 9:06 AM GMT)
அரவிந்த் தாராபுரம் சென்று தனது அக்காவை பார்த்து விட்டு நண்பரை பார்ப்பதற்காக சோமநூத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தாராபுரம்:
திருப்பூர் டி.எம்.எஸ்., நகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி, ஆட்டோ டிரைவர். இவரது மகன் அரவிந்த் (வயது 21). டெய்லர். இவரது சகோதரி திருமணமாகி தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டணத்தில் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் தற்போது பிரசவத்திற்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அரவிந்த் தாராபுரம் சென்று தனது அக்காவை பார்த்து விட்டு நண்பரை பார்ப்பதற்காக சோமநூத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையோரம் நின்ற வேனின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X