search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை

    கனமழை காரணமாக குரோம்பேட்டை, பல்லாவரம், அஸ்தினாபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

    சென்னை, கிண்டி, தி.நகர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, வளசரவாக்கம் , போரூர், மாங்காடு, குன்றத்தூர், திருவேற்காடு, குன்றத்தூர், செம்பரபாக்கம், திருவேற்காடு, கே.கே.நகர். ராமாபுரம் , வடபழனி, கோயம்பேடு, ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், சைதாப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், கோட்டூர்புரம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவில் கனமழை பெய்தது.

    கனமழை காரணமாக குரோம்பேட்டை, பல்லாவரம், அஸ்தினாபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    Next Story
    ×