search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம் பகுதியில் உடைப்பு ஏற்பட்ட தடுப்பணையை காணலாம்
    X
    வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம் பகுதியில் உடைப்பு ஏற்பட்ட தடுப்பணையை காணலாம்

    குடமுருட்டி ஆற்றில் தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சீரமைப்பு

    குடமுருட்டி ஆறு தடுப்பணையில் பொதுப்பணித் துறையினர் கருங்கல், மணல் உள்ளிட்டவற்றை கொண்டு தற்காலிகமாக சீரமைப்பு பணிகளை செய்து உள்ளனர்.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார பகுதியில் குடமுருட்டி ஆறு பிரதான பாசன ஆறாக இருந்து வருகிறது. இந்த வாய்க்காலில் இருந்து லாயம், ஆதிச்சமங்கலம், விருப்பாச்சிபுரம், வலங்கைமான், வளையுமாபுரம், கீழநல்லம்பூர், காங்கேயநகரம் ஆகிய பகுதிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் சந்தன வாய்க்கால் அமைந்து உள்ளது.

    இதேபோன்று மறுகரையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த தில்லையம்பூர் வாய்க்கால் தில்லையம்பூர், விசலூர், வேதப்பன் பேட்டை, நாகராசன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைந்து உள்ளது. இந்த 2 வாய்க்கால்களுக்கும் பாசன தண்ணீர் செல்லும் வகையில் சந்திரசேகரபுரம் பகுதியில் தடுப்பணை உள்ளது.

    கடந்த சில மாதங்களாக சிதிலம் அடைந்த நிலையில் காட்சி அளித்த இந்த தடுப்பணையில் சமீபத்தில் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் சந்தன வாய்க்கால் மற்றும் தில்லையம்பூர் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்வது கேள்விக்குறியானது. இதையடுத்து தடுப்பணையில் பொதுப்பணித் துறையினர் கருங்கல், மணல் உள்ளிட்டவற்றை கொண்டு தற்காலிகமாக சீரமைப்பு பணிகளை செய்து உள்ளனர்.

    இதன் காரணமாக 2 வாய்க்கால்களிலும் விவசாய தேவைக்கான தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×