என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இருசக்கர வாகன கொள்ளையர்கள் கைது
ராமநாதபுரம்:
ராமேசுவரம் புதுரோடு சுனாமி காலனியை தேர்ந்தவர் தீபன் குமார். இவரது மகன்கள் கபிலன் (வயது 18), மாதேஷ் (எ) பூச்சி (17).இவர்கள் இருவரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்துள்ளனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். ராமேசுவரம் வீட்டில் பதுங்கி இருந்த போது போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் இருசக்கர வாகனங்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து 7 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் இளையான்குடி தாலுகா, பெரும்பச்சேரி சேதுபதிநகரை சேர்ந்த முருகேசன் மகன் மணி (எ) மணிகண்டன் மற்றும் சிவகங்கை மாவட்டம், கொம்படி மதுரையை சேர்ந்த அர்ச்சுனன் மகன் மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணிகண்டன், மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த பரமக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வேல் முருகன், ராமேசுவரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாச் மற்றும் பரமக்குடி, ராமேசுவரம் உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பாராட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்