என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சையில் திருட்டுதனமாக மதுபாட்டில்கள் விற்றவர் கைது
தஞ்சாவூர்:
தஞ்சையில் டாஸ்மாக்கில் மது பாட்டில் வாங்கி சிலர் திருட்டுதனமாக வெளியே அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கலால் உதவி ஆணையர் ஜி.பழனிவேல் தலைமையில் மதுவிலக்கு ஆய்வாளர் ரவிமதி மற்றும் மதுவிலக்கு போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தஞ்சை காவேரி நகர் தற்காலிக மார்க்கெட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஒருவர் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்று கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் தஞ்சை காவேரி நகரை சேர்ந்த சுப்பையன் மகன் ராஜசேகர் (வயது 56) என்பதும், திருட்டுதனமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்றதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து அவரிடமிருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்