search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    அண்ணா தொழிற்சங்க பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல்

    2-ம் கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மண்டல நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 22-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்ணா தொழிற்சங்க பேரவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடக்க இருக்கிறது.

    நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, கும்பகோணம், நாகப்பட்டினம், திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை மண்டலங்களுக்கு முதல் கட்டமாக வருகிற 14-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மண்டல நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 22-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    3-ம் கட்டமாக சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், மதுரை, சேலம், கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், செங்கோட்டை, திருவனந்தபுரம், திண்டுக்கல், காரைக்குடி, ஓசூர், திருச்செந்தூர் ஆகிய அரசு விரைவு போக்குவரத்துக்கழக மண்டல நிர்வாகிகள் மற்றும் பணிமனை நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 29-ந்தேதி நடக்கிறது.

    4-ம் கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மண்டலங்களுக்கு செப்டம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 5-ம் கட்டமாக சேலம், தர்மபுரி, கரூர், திண்டுக்கல் மண்டலங்களுக்கு செப்டம்பர் 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (தெற்கு) மண்டல நிர்வாகிகள் மற்றும் பணிமனை நிர்வாகிகள் தேர்தலை ஆதிராஜாராம், தி.நகர் பி.சத்யா, விருகை வி.என்.ரவி, எம்.கே.அசோக், கே.பி.கந்தன் ஆகியோர் தொடங்கி வைத்து கண்காணிக்கிறார்கள்.

    மேலும் தேர்தல் பொறுப்பாளர்களாக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அடையார், திருவான்மியூர், மந்தைவெளி, பட்டுல்லா சாலை, தியாகராயநகர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், கே.கே. நகர், வடபழனி, அய்யப்பன்தாங்கல், பூவிருந்தவல்லி, குன்றத்தூர், கண்ணகிநகர், பெரும்பாக்கம் ஆகிய பணிமனைகளுக்கு தேர்தல் ஆணையர்கள் தலா 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (வடக்கு) தேர்தலை டி.ஜெயக்குமார், நா.பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தொடங்கி வைத்து கண்காணிக்கிறார்கள். 12 பேர் மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மண்டலத்தில் உள்ள அயனாவரம், பெரம்பூர், மத்திய பணிமனை, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், பேசின் பாலம், வியாசர்பாடி, மாதவரம், பாடிநல்லூர் பணிமனைகளுக்கு தேர்தல் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்கள் பரிசீலனை 18-ந்தேதி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்குள் மனுக்களை திரும்பபெறலாம். இரவு 7 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. 22-ந்தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை தேர்தல் நடக்கிறது. அன்று மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×