என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பாரதிய ஜனதா நிர்வாகிகள் 450 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்5 Aug 2021 4:45 AM GMT (Updated: 5 Aug 2021 4:45 AM GMT)
நட்டாலம் மகாதேவர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுடர்சிங் உள்பட 65 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கக்கோரி குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவில்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் நாகராஜாகோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத்தலைவர் தேவ், முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், சிவக்குமார், அஜித், நாஞ்சில் ராஜா, சுனில் அரசு மற்றும் நிர்வாகிகள் 105 பேர் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குமாரகோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவர் ஸ்ரீனிவாச பிரம்மா உள்பட 70 பேர் மீதும், குழித்துறை மகாதேவர் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட துணை தலைவர் முருகன், சேகர், ரெத்தினமணி, தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள் 90 பேர் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நட்டாலம் மகாதேவர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுடர்சிங் உள்பட 65 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 450 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கக்கோரி குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவில்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் நாகராஜாகோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத்தலைவர் தேவ், முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், சிவக்குமார், அஜித், நாஞ்சில் ராஜா, சுனில் அரசு மற்றும் நிர்வாகிகள் 105 பேர் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குமாரகோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவர் ஸ்ரீனிவாச பிரம்மா உள்பட 70 பேர் மீதும், குழித்துறை மகாதேவர் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட துணை தலைவர் முருகன், சேகர், ரெத்தினமணி, தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள் 90 பேர் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நட்டாலம் மகாதேவர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுடர்சிங் உள்பட 65 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 450 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X