என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுக்கூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா
Byமாலை மலர்4 Aug 2021 3:08 PM GMT (Updated: 4 Aug 2021 3:08 PM GMT)
மதுக்கூரில் இந்தியன் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடன் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மதுக்கூர்:
தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மதுக்கூர் பேரூராட்சிக்குட்பட்ட இந்தியன் வங்கியில் உதவியாளராக வேலைபார்த்து வருகிறார்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனோ பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் இந்தியன் வங்கியில் அவருடன் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கிருமி நாசினி மூலம் வங்கி சுத்தப்படுத்தப்பட்டது.
பரிசோதனை செய்தவர்களின் முடிவுகள் வரும் வரை தற்காலிகமாக வங்கி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X