search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குடும்பத்தினர் திட்டியதால் விஷம் குடித்த நண்பர்கள்: மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி

    நீடாமங்கலம் அருகே குடும்பத்தினர் திட்டியதால் விஷம் குடித்த நண்பர்களில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் நீடாமங்கலம் போலீஸ் சரகம் கப்பலுடையான் குடியான ்தெருவை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் மகன்ஆனந்த் (வயது26), ராஜசேகரன் மகன் அசோக்குமார் (26), அண்ணாதுரை மகன் ஆசைத்தம்பி (28) ஆகிய 3 பேரும் நண்பர்கள்.

    இதில் ஆனந்த், அசோக்குமார் ஆகிய இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து கொரோனா விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

    இந்த நிலையில் குடும்பத்தினர் திட்டியதால் மனமுடைந்த நண்பர்கள் 3 பேரும் கடந்த 31-ந்தேதி மதுவில் விஷம் கலந்து குடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் கடந்த 1-ந்தேதி உயிரிழந்தார். ஆசைத்தம்பி, அசோக்குமார் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆசைத்தம்பி நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த நீடாங்கலம் போலீசார் ஆசைதம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். அசோக்குமாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஆசைத்தம்பி நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
    Next Story
    ×