என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடும்பத்தினர் திட்டியதால் விஷம் குடித்த நண்பர்கள்: மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி
Byமாலை மலர்4 Aug 2021 11:57 AM GMT (Updated: 4 Aug 2021 11:57 AM GMT)
நீடாமங்கலம் அருகே குடும்பத்தினர் திட்டியதால் விஷம் குடித்த நண்பர்களில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் நீடாமங்கலம் போலீஸ் சரகம் கப்பலுடையான் குடியான ்தெருவை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் மகன்ஆனந்த் (வயது26), ராஜசேகரன் மகன் அசோக்குமார் (26), அண்ணாதுரை மகன் ஆசைத்தம்பி (28) ஆகிய 3 பேரும் நண்பர்கள்.
இதில் ஆனந்த், அசோக்குமார் ஆகிய இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து கொரோனா விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் குடும்பத்தினர் திட்டியதால் மனமுடைந்த நண்பர்கள் 3 பேரும் கடந்த 31-ந்தேதி மதுவில் விஷம் கலந்து குடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் கடந்த 1-ந்தேதி உயிரிழந்தார். ஆசைத்தம்பி, அசோக்குமார் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆசைத்தம்பி நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த நீடாங்கலம் போலீசார் ஆசைதம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். அசோக்குமாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஆசைத்தம்பி நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
திருவாரூர் நீடாமங்கலம் போலீஸ் சரகம் கப்பலுடையான் குடியான ்தெருவை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் மகன்ஆனந்த் (வயது26), ராஜசேகரன் மகன் அசோக்குமார் (26), அண்ணாதுரை மகன் ஆசைத்தம்பி (28) ஆகிய 3 பேரும் நண்பர்கள்.
இதில் ஆனந்த், அசோக்குமார் ஆகிய இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து கொரோனா விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் குடும்பத்தினர் திட்டியதால் மனமுடைந்த நண்பர்கள் 3 பேரும் கடந்த 31-ந்தேதி மதுவில் விஷம் கலந்து குடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் கடந்த 1-ந்தேதி உயிரிழந்தார். ஆசைத்தம்பி, அசோக்குமார் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆசைத்தம்பி நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த நீடாங்கலம் போலீசார் ஆசைதம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். அசோக்குமாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஆசைத்தம்பி நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X