என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி
Byமாலை மலர்4 Aug 2021 11:25 AM GMT (Updated: 4 Aug 2021 11:25 AM GMT)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 60 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பரம்புப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 60). இவர் கண்ணன் (65) என்பவருடன் மொபட்டில் சென்றார்.
இவர்கள் சூரக்குளம் பகுதியில் இருந்து பரம்புப்பட்டி செல்வதற்காக 4 வழிச்சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது பெருங்குடியில் இருந்து திருமங்கலம் நோக்கி வேகமாக கார் வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் மொபட்டில் வந்த பிச்சை, கண்ணன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கீழே விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பிச்சை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயத்துடன் கிடந்த கண்ணன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்து ஆஸ்டின் பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பரம்புப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 60). இவர் கண்ணன் (65) என்பவருடன் மொபட்டில் சென்றார்.
இவர்கள் சூரக்குளம் பகுதியில் இருந்து பரம்புப்பட்டி செல்வதற்காக 4 வழிச்சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது பெருங்குடியில் இருந்து திருமங்கலம் நோக்கி வேகமாக கார் வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் மொபட்டில் வந்த பிச்சை, கண்ணன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கீழே விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பிச்சை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயத்துடன் கிடந்த கண்ணன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்து ஆஸ்டின் பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X