என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
Byமாலை மலர்4 Aug 2021 9:35 AM GMT (Updated: 4 Aug 2021 9:35 AM GMT)
சிறு, குறு வணிகர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் ஆயுட்கால சந்தா கட்டணத்தொகை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை மூலம் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நல வாரியத்தின் மூலமாக வணிகர்களுக்கு, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவித்தொகை, நலிவற்ற வணிகர்களுக்கு உதவித்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
சிறு, குறு வணிகர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் ஆயுட்கால சந்தா கட்டணத்தொகை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி உறுப்பினராக பதிவு செய்யலாம். புதன்கிழமை தோறும் வணிக துறையை சேர்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் வணிகர்களை சந்தித்து வணிக நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்கிறார்கள்.
சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின் கீழ் பதிவுச்சான்று பெற்றவர்கள் பதிவுச்சான்றுடனும், பதிவு சான்று அல்லாதவர்கள் வணிகர் உரிமத்துடனும் மின்னஞ்சல் முகவரி, வருமானவரி நிரந்தர கணக்கு எண், செல்போன் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X