search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பிரம்மதேசம் அருகே இளம்பெண் தற்கொலை

    திருமணமான 3 ஆண்டில் பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளதால் விசாரணை நடத்த திண்டிவனம் கோட்டாட்சியருக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
    பிரம்மதேசம்:

    பிரம்மதேசம் அருகே உள்ள முத்தம்பாளையம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி பிரியா(வயது 22). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு வயதில் மகன் இருக்கிறான். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் மனமுடைந்த பிரியா, வீட்டில் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 3 ஆண்டில் பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளதால் இது தொடர்பாக விசாரணை நடத்த திண்டிவனம் கோட்டாட்சியருக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
    Next Story
    ×