என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடுப்பூசி போடுவதில் குளறுபடி- கம்யூனிஸ்டு புகார்
Byமாலை மலர்4 Aug 2021 6:38 AM GMT (Updated: 4 Aug 2021 6:38 AM GMT)
அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிட வேண்டும்.
திருப்பூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிகாமணி மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமாருக்கு அனுப்பி உள்ள மனுவில், நெருப்பெரிச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 16, 17, 18, 19, ஆகிய வார்டுகளில் உள்ள மக்களுக்கு போடப்படும் தடுப்பூசியை கடந்த 19 மற்றும் 31-ந்தேதி தவறுதலாக குருவாயூரப்பன் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட போயம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு போடப்பட்டது.
இதனால் நெருப்பெரிச்சல் மருத்துவமனைக்கு உட்பட்ட பகுதி மக்கள் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டது. சேடர்பாளையம், நெருப்பெரிச்சல், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் பெயரளவிற்கு ஓரிரு முகாம்கள் மட்டும் நடத்தியதால் பலருக்கும் தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X