search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் மேலும் 1908 பேருக்கு கொரோனா: 29 பேர் பலி

    தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20,217 இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறித்த அறிக்கையை தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டது. அதில் ‘‘தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1908 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இன்று மட்டும் 1,45,585 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை 25,65,452 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25,11,076 பேர் குணமடைந்துள்ளனர். 34,159 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×