search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சேர்ந்தமரம் அருகே மனைவி கண்டித்ததால் மரத்தில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

    சேர்ந்தமரம் அருகே மனைவி கண்டித்ததால் மரத்தில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    சுரண்டை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள கடையாலுருட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் மயில்ராஜ் (வயது 38). தொழிலாளி. இவருக்கு சீதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மயில்ராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி பலமுறை கண்டித்துள்ளார்.

    சம்பவத்தன்று மயில்ராஜ் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை சீதா கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த மயில் ராஜ் தனது தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×