என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்லிமலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
Byமாலை மலர்1 Aug 2021 9:39 AM GMT (Updated: 1 Aug 2021 9:39 AM GMT)
கொல்லிமலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:
கொல்லிமலை ஒன்றியம் குண்டூர் நாடு ஊராட்சியில் உள்ள இலக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 66). விவசாயி. இவர் அடிவாரத்தில் உள்ள நடுக்கோம்பையில் இவருடைய மகள் ரஞ்சிதா வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த ஒரு மோட்டார்சைக்கிள் ராஜகோபால் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டு அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மற்ற இருவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X