search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கொல்லிமலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

    கொல்லிமலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேந்தமங்கலம்:

    கொல்லிமலை ஒன்றியம் குண்டூர் நாடு ஊராட்சியில் உள்ள இலக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 66). விவசாயி. இவர் அடிவாரத்தில் உள்ள நடுக்கோம்பையில் இவருடைய மகள் ரஞ்சிதா வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த ஒரு மோட்டார்சைக்கிள் ராஜகோபால் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டு அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மற்ற இருவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×