என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீர்மட்டம் குறைந்ததால் குளங்களில் மண்மேடுகளை அகற்ற கோரிக்கை
Byமாலை மலர்1 Aug 2021 8:25 AM GMT (Updated: 1 Aug 2021 8:25 AM GMT)
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தின் போது குளங்களுக்கு தளி வாய்க்கால் வழியாக தண்ணீர் வழங்கப்பட்டது.
உடுமலை:
உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட குளங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து அரசாணை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதில் ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம், செட்டிக்குளம், தினைக்குளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், வலையபாளையம் குளம் ஆகிய குளங்களின் வாயிலாக 2,786 ஏக்கர் நேரடிப்பாசனமும் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தடி நீர் மட்டத்திற்கும் உதவியாக உள்ளது.
பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தின் போது குளங்களுக்கு தளி வாய்க்கால் வழியாக தண்ணீர் வழங்கப்பட்டது. பருவமழை போதியளவு பெய்யாத நிலையில் குளங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. பள்ளபாளையம் அருகே அமைந்துள்ள செங்குளம் 74.84 ஏக்கர் பரப்பளவு உடையதாகும். குளத்தின் வாயிலாக 285 ஏக்கர் நிலம் நேரடி பாசன வசதி பெறுகிறது.
குளத்தில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் உபரி நீர் வெளியேறும் ஷட்டர் உள்ளிட்ட பகுதிகளில் மண் மேடுகள் அதிகரித்துள்ளது. இவற்றை அகற்றினால் குளத்தில் கூடுதலாக தண்ணீர் தேக்க முடியும்.
எனவே அணையில் இருந்து தண்ணீர் திறப்புக்கு முன் இப்பணிகளை துவக்க பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X