search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இலங்கை அகதி பலி

    திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இலங்கை அகதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லையை அடுத்த கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது52). இலங்கை அகதியான இவர் திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் கோழிப் பண்ணையில் வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 3 பெண்கள் சாலையை கடந்துள்ளனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க சந்திரன் திடீரென ‘பிரேக்’ போட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சந்திரன் இறந்தார்.

    இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×