search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கொல்லிமலையில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

    கொல்லிமலையில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேந்தமங்கலம்:

    கொல்லிமலையில் உள்ள வாழவந்திநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையில் போலீசார் தேவானூர்நாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பரியூர்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகேஷ் (வயது 36), ஜீவானந்தம் ஆகியோர் தங்களது தோட்டங்களில் உரிய அனுமதியில்லாத 2 நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, நாகேஷ், ஜீவானந்தத்தை கைது செய்தனர்.
    Next Story
    ×