search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெற்றோர் பைக் வாங்கி கொடுக்காததால் வாலிபர் தற்கொலை

    வேலை முடிந்து வீடு திரும்பிய சக நண்பர்கள் பிரதீபன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    திருப்பூர் :

    நீலகிரி மாவட்டம் கூடலூர் போத்தனகுன்னு உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் பிரதீபன் (வயது 22).கடந்த மாதம் முதல் திருப்பூர் அவிநாசி சாலையிலுள்ள காந்திநகர் பகுதியில் தங்கியிருந்து அருகே உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் ஊட்டியில் உள்ள தனது பெற்றோரிடம் நண்பர்கள் அனைவரும் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பதாகவும் தனக்கும் வேலைக்கு சென்றுவர புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் சில மாதங்கள் கழித்து வாங்கித்தருவதாக கூறியுள்ளனர்.

    இதனால் மனமுடைந்த பிரதீபன் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீடு திரும்பிய சக நண்பர்கள் பிரதீபன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×