search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பேரளம் அருகே சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் கைது

    பேரளம் அருகே சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நன்னிலம்:

    பேரளம் அருகே உள்போழக்குடி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியும், பூந்தோட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபரும் போழகுடி அருகே வயல் கரையில் பேசிக் கொண்டு இருந்தனர். இதை பார்த்த அங்குள்ளவர்கள் இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டுக்கு சென்று மண்ணெண்னை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தார்.

    இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு சிறுமியை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேசிய போழக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (25), ஜான் (24), புலிகுட்டி (23), முருகன் (44) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×