என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் திருமணம் செய்த வாலிபர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை
Byமாலை மலர்30 July 2021 9:18 AM GMT (Updated: 30 July 2021 9:18 AM GMT)
திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள தர்மபுரியை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(35). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தபோது மதினாபானு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கமலக்கண்ணன் தர்மபுரியில் வசித்து வந்தார்.
கொடைரோடு சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
மனைவியை அழைத்தும் அவர் வராததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கமலக்கண்ணன் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். கோவை-நாகர்கோவில் வழித்தடத்தில் வந்த ரெயில் அவர் தலை மீது ஏறி நசுக்கியதில் உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள தர்மபுரியை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(35). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தபோது மதினாபானு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கமலக்கண்ணன் தர்மபுரியில் வசித்து வந்தார்.
கொடைரோடு சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
மனைவியை அழைத்தும் அவர் வராததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கமலக்கண்ணன் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். கோவை-நாகர்கோவில் வழித்தடத்தில் வந்த ரெயில் அவர் தலை மீது ஏறி நசுக்கியதில் உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X