என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாதாள சாக்கடை குழிகளால் விபத்தில் சிக்கும் பொதுமக்கள்
Byமாலை மலர்29 July 2021 10:27 AM GMT (Updated: 29 July 2021 10:27 AM GMT)
சாலையின் நடுவே குழி தோண்டும் போது அடியில் செல்லும் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பாரப்பாளையம் அருகே எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் 3 வீதிகள் உள்ளது. இந்தப் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு சாலையின் நடுவே குழி தோண்டி போட்டு 2 மாதம் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பனியன் நிறுவன தொழிலாளர்கள் சாலையின் நடுவில் உள்ள குழிக்குள் விழுந்து காயமடைகின்றனர்.
சாலையின் நடுவே குழி தோண்டும் போது அடியில் செல்லும் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனை சரி செய்ய கோரி மாநகராட்சியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. தெருவிளக்கு சரிவர எரிவதில்லை. இதே நிலை தொடருமானால் போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X