என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து
Byமாலை மலர்29 July 2021 9:52 AM GMT
ராமநாதபுரம் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான நில சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அரசு துறையைச் சேர்ந்த பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பழைய கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் நில அளவை பிரிவில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதைக் கண்ட அங்கு பணிபுரியும் காவலாளிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஆவணங்கள் ஏராளமாக எரிந்து சேதமானது. விபத்துக்கான காரணம் குறித்தும், சேதமடைந்த ஆவணங்கள் குறித்தும் கேணிக்கரை போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே கட்டிடத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கீழ்த்தளத்தில் இயங்கி வந்த கல்வி அலுவலர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அரசு துறையைச் சேர்ந்த பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பழைய கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் நில அளவை பிரிவில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதைக் கண்ட அங்கு பணிபுரியும் காவலாளிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஆவணங்கள் ஏராளமாக எரிந்து சேதமானது. விபத்துக்கான காரணம் குறித்தும், சேதமடைந்த ஆவணங்கள் குறித்தும் கேணிக்கரை போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே கட்டிடத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கீழ்த்தளத்தில் இயங்கி வந்த கல்வி அலுவலர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X