என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசி அருகே 33 மாடுகளுடன் லாரி பறிமுதல்
Byமாலை மலர்29 July 2021 9:18 AM GMT (Updated: 29 July 2021 9:18 AM GMT)
மாடுகளை சித்ரவதை செய்யும் விதமாக 33 மாடுகளை ஒரே லாரியில் அடைத்து கொண்டு வந்தனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக லாரி ஒன்று அதிவேகமாக வந்தது. உடனே லாரியை மறித்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் மாடுகள் நிரம்பி இருந்தன. மாடுகளை சித்ரவதை செய்யும் விதமாக 33 மாடுகளை ஒரே லாரியில் அடைத்து கொண்டு வந்தனர். மேலும் தஞ்சாவூரிலிருந்து லாரியில் மாடுகளை ஏற்றி கொண்டு பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் திண்டுக்கல்லை சேர்ந்த சின்னசாமி (வயது 50) மற்றும் உடன் இருந்த கிளீனர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த திருமலைசாமி மகன் சக்திவேல் (45) என்பதும் தெரியவந்தது. போலீசார் 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் 33 மாடுகளையும், லாரியையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X