என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-2 மறுதேர்வு-திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை
Byமாலை மலர்29 July 2021 8:52 AM GMT (Updated: 29 July 2021 8:52 AM GMT)
பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களிடம் இருந்து 27-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
திருப்பூர்:
பிளஸ்-2 படித்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 19-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகின.
இதில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல் பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களிடம் இருந்து 27-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் 95 தனித்தேர்வர்கள் துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். மேலும் பிளஸ்-2 மதிப்பெண்களில் திருப்தி இல்லையென மாவட்டத்தில் யாரும் இதுவரை விண்ணப்பிக்கவில்லை.
இவர்கள் துணைத்தேர்வு எழுதும் பட்சத்தில் அனைத்து பாடங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் எவரும் விருப்பம் காட்டவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X