search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய கொடி
    X
    தேசிய கொடி

    75வது சுதந்திர தினம்- சென்னை காமராஜர் சாலையில் ரூ.1.83 கோடியில் நினைவு தூண்

    ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
    சென்னை:

    நாட்டின் 75-வது சுதந்திர தினம் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

    மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.

    பிரதமர் மோடி

    இந்த நிலையில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ரூ.1.83 கோடியில் நினைவு தூண் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    சென்னை காமராஜர் சாலையில் 75-வது சுதந்திர தின நினைவு தூண் ரூ.1.83 கோடியில் அமைக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் அறிவிப்பை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

    ஒரு மாதத்திற்குள் நினைவுத்தூண் கட்டப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


    Next Story
    ×