search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக தலைவர் அண்ணாமலை
    X
    பாஜக தலைவர் அண்ணாமலை

    தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அதிமுக போராட்டத்தின் நோக்கம் - பாஜக தலைவர் அண்ணாமலை

    தி.மு.க. மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் பா.ஜ.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொய்யான வாக்குறுதியை சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்து உள்ளது. தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அ.தி.மு.க. போராட்டத்தின் நோக்கம். மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பா.ஜ.க. மக்களுடன் நிற்கும். தி.மு.க. மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் பா.ஜ.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக மத்திய மந்திரி கூறியுள்ளார். இந்த விலை உயர்வை பா.ஜ.க.வும் ஏற்றுக்கொள்ளவில்லை. நிச்சயமாக பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை காணப்படும்.

    கோப்புபடம்

    பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு தயார். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் மாநில நிதியமைச்சர் பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரலாம் என்று சொல்லட்டும். அப்புறம் பார்க்கலாம். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் போது பேசிய விஷயங்களை இப்போது பேச வேண்டியது தானே. பெட்ரோல் விலையை குறைக்க முயற்சி எடுக்கப்படும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×